ARTICLE AD BOX

திண்டுக்கல் அருகேயுள்ள வீரக்கல்லில் கோயில் திருவிழாவுக்கு வந்திருந்த பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த 17 வயது சிறுவன் உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திண்டுக்கல் அடுத்த செம்பட்டி அருகேயுள்ள வீரக்கல் வெள்ளைமாலை வீருமாறம்மன் கோயில் திருவிழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில், நேற்று காலை திருவிழாவுக்கு வந்திருந்த பெண் ஒருவர் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த போது, ஜன்னல் வழியாக இளைஞர்கள் செல்போனில் வீடியோ எடுத்ததைப் பார்த்து கூச்சலிட்டுள்ளார். அங்கிருந்தவர்கள் அந்த இளைஞர்களை பிடித்து செம்பட்டி போலீஸில் ஒப்படைத்தனர்.

7 months ago
8







English (US) ·