ARTICLE AD BOX

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கனிம வளத் துறை உதவி இயக்குநர் செல்வ சேகரன் வீட்டில் இன்று காலையில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் திடீர் சோதனை ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்ட கனிம வளத் துறை உதவி இயக்குநராக பணிபுரிபவர் செல்வ சேகரன். இவர், திண்டுக்கல் சென்னமயநாயக்கன்பட்டியில் ஏழமலையான் நகரில் வசித்து வருகிறார். இவரது குடும்பத்தினர் திருநெல்வேலியில் உள்ளனர். இந்நிலையில் செல்வசேகரன் வசித்து வரும் சென்னம நாயக்கன்பட்டி ஏழுமலையான் நகரில் உள்ள வீட்டில் இன்று காலை 6.30 மணிக்கு திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் டிஎஸ்பி நாகராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கீதா ரூபா ராணி உள்ளிட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

2 months ago
4







English (US) ·