திரு​வள்​ளூர் | நிலம் வாங்​கி தருவதாக ரூ.1.19 கோடி மோசடி செய்த 4 பேர் கைது

10 months ago 9
ARTICLE AD BOX

திரு​வள்​ளூர்: பூந்​தமல்​லியை அடுத்த காட்டு​பாக்​கத்​தைச் சேர்ந்த சிவக்​கு​மார் என்பவர் வெளி​நாட்​டில் வேலை பார்த்து சம்பா​தித்த பணத்​தைக் கொண்டு, சென்னை​யில் நிலம் வாங்க வேண்டி வானகரம், மேட்டுக் குப்​பத்​தைச் சேர்ந்த வாசு என்பவரை அணுகி உள்ளார். சிவக்​கு​மாருக்கு நிலம் வாங்​குவது பற்றிய முன் அனுபவம் இல்லாததை தெரிந்து கொண்டு அவரை ஏமாற்ற வாசு நினைத்​தார்.

இதன்​படி, வாசு தனக்கு தெரிந்த நபரை சிவக்​கு​மாரிடம் தனது அக்கா என கூறி அவரிடம் திரு​வள்​ளூர் மாவட்​டம், பூந்​தமல்லி நகராட்சி, 21-வது வார்​டுக்கு உட்பட்ட அம்பேத்கர் நகரில் 50 சென்ட் நிலம் இருப்​ப​தாக கூறி, ஒரு சென்ட் ரூ.11 ஆயிரம் என்ற அடிப்​படை​யில், அந்நிலத்​துக்கு ரூ.5.5 லட்சம் என நிர்​ணயம் செய்து, அதனை வாங்கி விற்​றால் நல்ல லாபம் கிடைக்​கும் என கூறி உள்ளார்.

Read Entire Article