ARTICLE AD BOX

திருவள்ளூர்: பூந்தமல்லியை அடுத்த காட்டுபாக்கத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து சம்பாதித்த பணத்தைக் கொண்டு, சென்னையில் நிலம் வாங்க வேண்டி வானகரம், மேட்டுக் குப்பத்தைச் சேர்ந்த வாசு என்பவரை அணுகி உள்ளார். சிவக்குமாருக்கு நிலம் வாங்குவது பற்றிய முன் அனுபவம் இல்லாததை தெரிந்து கொண்டு அவரை ஏமாற்ற வாசு நினைத்தார்.
இதன்படி, வாசு தனக்கு தெரிந்த நபரை சிவக்குமாரிடம் தனது அக்கா என கூறி அவரிடம் திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி நகராட்சி, 21-வது வார்டுக்கு உட்பட்ட அம்பேத்கர் நகரில் 50 சென்ட் நிலம் இருப்பதாக கூறி, ஒரு சென்ட் ரூ.11 ஆயிரம் என்ற அடிப்படையில், அந்நிலத்துக்கு ரூ.5.5 லட்சம் என நிர்ணயம் செய்து, அதனை வாங்கி விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என கூறி உள்ளார்.

10 months ago
9







English (US) ·