ARTICLE AD BOX

திருச்சி: சென்னை சவுகார்பேட்டை பகுதியில் இயங்கி வரும் பிரபல தங்க நகை விற்பனை மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதிகளான குணவந்த், மகேஷ் ஆகியோர் கடந்த செப்.8-ம் தேதி தங்க நகைகளை காரில் எடுத்துக்கொண்டு சேலம், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள நகைக் கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக புறப்பட்டனர்.
திண்டுக்கல்லில் விற்பனையை முடித்த பின், 3 பேரும் மீதமுள்ள 10 கிலோ தங்க நகைகளுடன் செப்.13-ம் தேதி சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த போது சமயபுரம் அருகே இருங்களூர் பகுதியில் சென்றபோது அவர்களை மற்றொரு காரில் பின்தொடர்ந்து வந்த கும்பல், குணவந்த், மகேஷ், பிரதீப்கான் ஆகியோர் முகத்தில் மிளகாய் பொடியை தூவி 10 கிலோ நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

2 months ago
4







English (US) ·