திருச்சி அருகே பழுதாகி நின்ற பேருந்து மீது கார் மோதி தாய், குழந்தை உட்பட 3 பேர் உயிரிழப்பு

4 months ago 5
ARTICLE AD BOX

திருச்சி: ​திருச்சி அருகே தேசிய நெடுஞ்​சாலை​யில் பழு​தாகி நின்ற அரசு பேருந்து மீது பின்​னால் அதிவேக​மாக வந்த கார் மோதிய விபத்​தில் தாய், குழந்தை உட்பட 3 பேர் உயி​ரிழந்​தனர். தென்​காசி மாவட்​டம் ஆலங்​குளம் பகு​தியைச் சேர்ந்​தவர் ஜோசப்​(21). சென்​னை​யில் தங்கி வாடகை கார் ஓட்டி வரு​கிறார். தென்​காசி​யில் ஆக.30-ம் தேதி நடை​பெற்ற திருமண நிகழ்ச்​சி​யில் ஜோசப் பங்​கேற்​று​விட்டு மீண்​டும் சென்னை செல்​வதற்​காக நேற்று முன்​தினம் இரவு ஆலங்​குளத்​தில் இருந்து காரில் புறப்​பட்டு உள்​ளார்.

அப்​போது, ஜோசப்பின் நண்​பர்​களான ஆலங்​குளத்தைச் சேர்ந்த செல்​வகு​மார்​(37), அவரது மனைவி யசோ​தா(29), இவர்​களது மகள் அனோனி​யா(2), மற்​றொரு நண்​ப​ரான விஜய​பாபு (31) ஆகியோ​ரும் உடன் சென்​றனர். இவர்​கள் நேற்று அதி​காலை 2 மணி​யள​வில், திருச்சி மாவட்​டம் சிறுக​னூரை அடுத்த நெடுங்​கூர் அருகே சென்​ற​போது, அங்கு பழு​தாகி நின்று கொண்​டிருந்த அரசுப் பேருந்​தின் பின் பகு​தி​யில் கார் பயங்​கர​மாக மோதி​யது.

Read Entire Article