ARTICLE AD BOX

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கண்காணிப்பாளர் மற்றும் கோயில் காவலரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிவகங்கை மாவட்டம் திருமாஞ்சோலை அரசனூரைச் சேர்ந்தவர் விவேக் (34). இவர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்துறை கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதால் கோயில் தரிசன வரிசைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில், குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் பிரபாகரன் (40), சிறப்பு பணிக்காக திருச்செந்தூர் கோயில் புறக்காவல் நிலையத்தில் இருந்தார். அப்போது, அவர் தனக்கு வேண்டியவர்களை மூத்த குடிமக்கள் செல்லும் தரிசன வழியில் அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.

3 months ago
5







English (US) ·