திருச்செந்தூர் கோயில் அதிகாரி - காவலர் மோதல்: நடந்தது என்ன?

3 months ago 5
ARTICLE AD BOX

தூத்துக்குடி: ​திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் கண்​காணிப்​பாளர் மற்​றும் கோயில் காவலரிடையே கடும் மோதல் ஏற்​பட்​டது. இதில் காயமடைந்த இரு​வரும் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டனர். சிவகங்கை மாவட்​டம் திரு​மாஞ்​சோலை அரசனூரைச் சேர்ந்​தவர் விவேக் (34). இவர், திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் உள்​துறை கண்​காணிப்​பாள​ராகப் பணி​யாற்றி வரு​கிறார். இந்​நிலை​யில், நேற்று விடு​முறை தினம் என்​ப​தால் கோயில் தரிசன வரிசைகளில் பக்​தர்​கள் கூட்​டம் அலைமோ​தி​யது.

இந்​நிலை​யில், குலசேகரன்​பட்​டினம் காவல் நிலை​யத்​தில் பணி​யாற்றி வரும் காவலர் பிர​பாகரன் (40), சிறப்பு பணிக்​காக திருச்​செந்​தூர் கோயில் புறக்​காவல் நிலை​யத்​தில் இருந்​தார். அப்​போது, அவர் தனக்கு வேண்​டிய​வர்​களை மூத்த குடிமக்​கள் செல்​லும் தரிசன வழி​யில் அனுப்பி வைத்​த​தாகக் கூறப்​படு​கிறது.

Read Entire Article