ARTICLE AD BOX

திருத்தணி: திருத்தணி அருகே லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் போலீஸார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஆர்.எஸ். மங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாம்சன் மனைவி மெர்சி (35). இவர் கடந்த 2016-ம் ஆண்டு தமிழக காவல் துறையில் உதவி காவல் ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். மெர்சி ஆவடி காவல் ஆணையரகத்தின் கீழ் உள்ள பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.பணி நிமித்தமாக திருநின்றவூர் பகுதியில் வசித்து வந்த மெர்சி, ஆர்.எஸ்.மாங்காபுரத்தில் வசிக்கும் தன் பெற்றோர் வீட்டில் தன் குழந்தைகளை விட ஆர்.எஸ். மங்காபுரம் சென்றார்.

9 months ago
9







English (US) ·