ARTICLE AD BOX

திருப்பூர்: மக்களுக்கு பயன்பாடற்ற இடத்தில் சாலை அமைத்ததை எதிர்த்து புகார் அளித்தவரை காரை ஏற்றிக் கொன்ற வழக்கில், திமுக பேரூராட்சித் தலைவர் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் அடுத்த கருகம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி (57). இவர் அப்பகுதியில் உள்ள தேநீர் கடைக்கு நேற்று முன்தினம் மாலை சென்று விட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
சாமளாபுரம் - காரணம்பேட்டை சாலையில் கருகம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி அருகே சென்றபோது, பின்னால் வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பழனிசாமி உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய கார், நிற்காமல் சென்றுவிட்டது.

3 months ago
5







English (US) ·