திருப்பூர் | புகார் அளித்தவரை காரை ஏற்றி கொன்ற திமுக பேரூராட்சி தலைவர் கைது

3 months ago 5
ARTICLE AD BOX

திருப்பூர்: மக்​களுக்கு பயன்​பாடற்ற இடத்​தில் சாலை அமைத்​ததை எதிர்த்து புகார் அளித்​தவரை காரை ஏற்​றிக் கொன்ற வழக்கில், திமுக பேரூ​ராட்​சித் தலை​வர் கைது செய்​யப்​பட்​டார். திருப்​பூர் மாவட்டம் சாமளாபுரம் அடுத்த கரு​கம்​பாளை​யத்தை சேர்ந்​தவர் பழனி​சாமி (57). இவர் அப்​பகு​தி​யில் உள்ள தேநீர் கடைக்கு நேற்று முன்​தினம் மாலை சென்று விட்​டு, இருசக்கர வாக​னத்​தில் வீடு திரும்​பிக் கொண்​டிருந்​தார்.

சாமளாபுரம் - காரணம்​பேட்டை சாலை​யில் கரு​கம்​பாளை​யம் அரசு தொடக்​கப்​பள்ளி அருகே சென்​ற​போது, பின்​னால் வந்த கார் இருசக்கர வாக​னத்​தின் மீது மோதி​யது. இதில் பழனி​சாமி உயி​ரிழந்​தார். விபத்தை ஏற்​படுத்​திய கார், நிற்​காமல் சென்​று​விட்​டது.

Read Entire Article