திருமணத்துக்கு மறுத்த கல்லூரி மாணவி கொலை: காவல் நிலையத்தில் இளைஞர் சரண்

7 months ago 8
ARTICLE AD BOX

பொள்ளாச்சி: திருமணத்துக்கு மறுத்த கல்லூரி மாணவியைக் கத்தியால் குத்தி கொலை செய்த காதலன், பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். பொள்ளாச்சி வடுகபாளையம் பொன்முத்து நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் அஸ்விதா (19) மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், அஸ்விதா வீட்டில் தனியாக இருந்துள்ளார். மாலையில் கண்ணன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, அஸ்விதா உடலில் கத்திகுத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அஸ்விதாவை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித் துள்ளனர்.

Read Entire Article