தூத்துக்குடி | சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: 3 பேருக்கு சிறை

8 months ago 8
ARTICLE AD BOX

தூத்துக்குடி: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 3 பேருக்கு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தூத்துக்குடி அருகேயுள்ள மறவன்மடத்தை சேர்ந்த ஜெபராஜ் (27), கதிர்வேல் நகரைச் சேர்ந்த சூரியராஜன் (34), புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜோசுவாராஜ் (25) ஆகியோர் 2019-ம் ஆண்டு 9 வயது மற்றும் 15 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

Read Entire Article