தூத்துக்குடியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை: பிஹார் இளைஞர்கள் 4 பேரிடம் விசாரணை

3 months ago 4
ARTICLE AD BOX

தூத்துக்குடி: பயங்கரவாத சதி வழக்கு தொடர்பாக தூத்துக்குடியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். பிஹார் இளைஞர்கள் 4 பேரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய பிஹார் மாநிலத்தை சேர்ந்த முகமது (22) என்ற இளைஞர் அண்மையில் கைது செய்யப்பட்டார். அவரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவர் பிஹார் மாநிலத்தை சேர்ந்த முஸ்பிக் ஆலம் என்பவருடன் செல்போனில் அடிக்கடி பேசியது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரித்தபோது, முஸ்பிக் ஆலம் தூத்துக்குடி அருகே சிலுவைப்பட்டி பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்துக்கு பெயின்டர் பணிக்காக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தமிழகம் வந்தது தெரியவந்தது.

Read Entire Article