ARTICLE AD BOX

புதுடெல்லி: காயத்தில் இருந்து குணமடைந்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள இந்தியா ‘ஏ’ அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரிஷப் பந்த் கடந்த ஜூலை மாதம் மான்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் காயம் அடைந்தார். இதனால் அவர், ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர், மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் காயத்தில் இருந்து குணமடைந்துள்ள அவர், தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிராக நடைபெற உள்ள 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா ‘ஏ’ அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தொடரின் முதல் போட்டி வரும் 30-ம் தேதி பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில் நடைபெறுகிறது.

2 months ago
4







English (US) ·