ARTICLE AD BOX

கிருஷ்ணகிரி: தென்காசியில் நடந்த அதிமுக பிரமுகர் கொலையில் ஜாமீனில் வந்தவரை, கிருஷ்ணகிரியில் வெட்டிக் கொல்ல முயன்ற கூலிப்படையைச் சேர்ந்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஏரிக்கரை பகுதியில் நேற்று இரவு ஒருவரை, அரிவாள், பெட்ரோல் கேனுடன் 5 பேர் கொண்ட கும்பல் துரத்திச் செல்வதாக, நகர காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு, எஸ்.ஐ-க்கள் அன்பழகன், கணேஷ் மற்றும் போலீஸார், 5 பேரையும் பிடித்து, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, விசாரணை நடத்தினர்.

2 months ago
4







English (US) ·