ARTICLE AD BOX

சென்னை: தெலங்கானா மாநில பெண்ணுக்குச் சொந்தமான ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆள்மாறாட்டம் மூலம் அபகரித்ததாக 5 பேர் கும்பலை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள ஹரிதவனம் பகுதியில் வசித்து வருபவர் விஜயசாமுண்டீஸ்வரி (59).
இவருக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்புள்ள காலிமனை வேளச்சேரி விஜயா நகரில் இருந்தது. இதை சிலர் போலி ஆவணம் மற்றும் ஆள்மாறாட்டம் மூலம் அபகரித்துவிட்டனர். இதுகுறித்து விஜயசாமுண்டீஸ்வரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த ஜூன் 2-ம் தேதி புகார் தெரிவித்தார்.

3 months ago
5







English (US) ·