தொடர்ச்சியாக 2 தோல்விகள்: பேட்டிங் வியூகத்தை மாற்றுமா சிஎஸ்கே? - IPL 2025

8 months ago 8
ARTICLE AD BOX

ஐபிஎல் போட்டிகளில் ஜாம்பவான் என்று சொல்லக்கூடிய அளவுக்கு அதிக கோப்பையைக் கைப்பற்றிய அணிகள் சென்னை சூப்பர் கிங்ஸும் (சிஎஸ்கே), மும்பை இந்தியன்ஸும். இரு அணிகளுமே தலா 5 முறை கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்தவை. ஆனால் இந்த சீசனின் தொடக்கம் முதல் 2 அணிகளுமே போதுமான திறனை வெளிப்படுத்தவில்லை.

மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக தான் விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வி கண்டது. அதேநேரத்தில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி, அடுத்த 2 போட்டிகளிலும் வெற்றியை நழுவவிட்டது. ஆர்சிபி அணியுடனான இரண்டாவது லீக் போட்டியில் 197 ரன்கள் என்ற இலக்கைத் துரத்த முடியாமல் 146 ரன்கள் மட்டுமே எடுத்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது சிஎஸ்கே. நேற்று முன்தினம் குவாஹாட்டியில் நடைபெற்ற ஆட்டத்தில் 183 ரன்கள் என்ற இலக்கை சேஸ் செய்ய முடியாமல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைப் பெற்றது சிஎஸ்கே.

Read Entire Article