தொழிலதிபர் கொலை வழக்கில் துறவி பூஜா கைது

2 months ago 4
ARTICLE AD BOX

புதுடெல்லி: உ.பி. அலிகரின் பெண் துறவி பூஜா சகுன் பாண்​டே(50) எனும் அன்​னபூர்ணா பார​தி. கல்​லூரி உதவிப் பேராசிரிய​ராகப் பணி​யாற்​றி​னார். பிறகு பணியை விடுத்து துறவறம் பூண்டு ஆசிரமம் நடத்தி வந்​தார். பூஜா​விற்கு நிரஞ்​சன் அகா​டா, மகா மண்​டலேஷ்வர் பட்​டம் அளித்​துள்​ளது. பிறகு இந்து மகா சபா​வில் இணைந்து அதன் பொதுச் செய​லா​ள​ராக​வும் உள்​ளார்.

அலிகரில் துறவி பூஜா நடத்​திய ஆசிரமத்​தின் நிர்​வாகி​யும், நெருங்​கிய சகா​வு​மாக இருந்​தவர் அபிஷேக் குப்​தா. தொழில​திப​ரான இவர், இருசக்கர விற்​பனை நிலை​யம் நடத்தி வந்​தார். இரு​வருக்​கும் இடையி​லான நெருக்​கம் விரோத​மாகி மோதலானது. இச்​சூழலில் அபிஷேக் கடந்த செப்​டம்​பர் 26 -ல் சுட்​டுக் கொல்​லப்​பட்​டார். இக்​கொலை​யைச் செய்த அலிகரின் பிரபல கிரிமினல்​களான பைஸல் மற்​றும் ஆசீப் மறு​நாளே கைது செய்​யப்​பட்​டனர்.

Read Entire Article