தோல் புற்று நோய்க்கு 6வது முறையாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள மைக்கேல் கிளார்க்

4 months ago 7
ARTICLE AD BOX

சிட்னி: தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், ஆறாவது முறையாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

2006ல் முதன்முதலாக தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கிளார்க், தொடர் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதோடு தற்போது ஆறாவது முறையாக அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். 44 வயதாகும் அவர், இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் தளத்தில், “தோல் புற்றுநோய் பாதிப்பு ஆஸ்திரேலியாவில் அதிகம் உள்ளது. இன்று எனது மூக்கு பகுதியில் மற்றொரு அறுவை சிகிச்சை நடந்தது. இந்த நேரத்தில் நீங்கள் உங்களது தோலை பரிசோதிக்க வேண்டியது அவசியம். நோய் வருமுன் காக்க வேண்டியது அவசியம். எனது விவகாரத்தில் தொடர் பரிசோதனை செய்ததால், புற்றுநோய் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிய முடிந்தது. இதற்கு எனது மருத்துவர் தான் காரணம்” என கூறியுள்ளார்.

Read Entire Article