நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.10.89 கோடி மதிப்பிலான நகை, பணம் மோசடி: சென்னையில் தம்பதி கைது

3 months ago 5
ARTICLE AD BOX

சென்னை: நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.10.89 கோடி தங்க நகைகள் மற்றும் பணம் பெற்று மோசடி செய்ததாக கணவன்- மனைவி கைது செய்யப்பட்டனர். மேலும், உரிமையாளரை மிரட்டல் விடுத்த வழக்கறிஞரும் சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை வானகரத்தில் நகைக்கடை நடத்தி வருபவர் ஸ்ரீதேவி (50). இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த ஜூன் 11-ம் தேதி புகார் ஒன்று அளித்திருந்தார். அதில், ”சென்னை அண்ணா நகரில் வசித்து வரும் சுனிதா பிரகாஷ் (43), அவரது கணவர் பிரகாஷ் (43) மற்றும் சிலர் எனக்கு அறிமுகமாகினர். அவர்கள் என்னிடம் 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் 2024 டிசம்பர் வரை கடன் அடிப்படையில் சிறிது சிறிதாக ரூ.5.13 கோடி மதிப்புள்ள சுமார் 9.5 கிலோ தங்க நகைகளும், ரூ.1.30 கோடி மதிப்புள்ள வைர நகைகளையும் பெற்றும் கொண்டனர். மேலும், அவர்களிடம் முதலீடு செய்யும் பணத்துக்கு இரட்டிப்பு லாபம் தருவதாக ரூ.4.45 கோடி பெற்றுக் கொண்டனர்.

Read Entire Article