நடிகர்கள் ரஜினி, கமல், தனுஷுக்கு கொலை மிரட்டல்: மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை

2 months ago 3
ARTICLE AD BOX

சென்னை: ‘வெடிகுண்டு வீசி தாக்​கு​வோம்’ என நடிகர்​கள் ரஜினி, கமல் மற்​றும் தனுஷுக்கு மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது குறித்து போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர். சமீப கால​மாக அரசி​யல் பிரபலங்​கள், கல்வி நிறு​வனங்​கள், திரை பிரபலங்​கள் மற்​றும் விமான நிலை​யங்​கள், ஆளுநர் மாளிகை என பல்​வேறு இடங்​களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்​டல்​கள் விடுக்​கப்​பட்டு வரு​கின்​றன. இந்​நிலை​யில், டிஜிபி அலு​வல​கத்​துக்கு நேற்று அதி​காலை இ-மெ​யில் ஒன்று வந்​தது.

அதில், நடிகர்​கள் ரஜினி, கமல்​ஹாசன், தனுஷ் ஆகியோர் மீது வெடிகுண்டு வீசி தாக்​கப்​போவ​தாக கூறப்​பட்​டிருந்​தது. பொது​வாக வீடு​கள், அலு​வல​கங்​களில் வெடிகுண்டு வைக்​கப்​பட்​டிருப்​ப​தாகத்​தான் மிரட்​டல் வரும். ஆனால், வெடிகுண்டு வீசப்​படும் என்று வந்த தகவல் பெரும் அதிர்ச்​சியை உண்​டாக்​கியது.

Read Entire Article