ARTICLE AD BOX

நாகையில் இருந்து இலங்கை சென்ற பயணிகள் கப்பலில் போதைப்பொருள் கடத்திய இளைஞரை அந்நாட்டு சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
நாகையில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட பயணிகள் கப்பல் இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்தை அடைந்தது. அந்தக் கப்பலில் பயணித்தவர்களின் உடைமைகளை இலங்கை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில், சென்னையைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞரிடம் 'குஷ்' என்ற போதைப் பொருள் 4 கிலோ இருந்தது கண்டறியப்பட்டது.

7 months ago
8







English (US) ·