ARTICLE AD BOX

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றம் மற்றும் ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு வெடிகுண்டு வைத்ததாக வந்த இ-மெயிலை தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அடையாளம் தெரியாத முகவரி மூலம் இ-மெயில் ஒன்று வந்தது. அதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றம் மற்றும் ஆஞ்சநேயர் கோயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது, இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா உத்திரவின்பேரில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் டயானா உதவியுடன் ஆட்சியர் அலுவலக வளாகம், நீதிமன்றம், ஆஞ்சநேயர் கோயில், நரசிம்மர் கோயில் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

2 months ago
4







English (US) ·