நாமக்கல்லில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை - காவல் துறை மீது உறவினர்கள் குற்றச்சாட்டு 

9 months ago 9
ARTICLE AD BOX

நாமக்கல்: இளைஞரின் தற்கொலைக்கு காரணமான காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வேலகவுண்டம்பட்டி காவல் நிலையம் முன் நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

நாமக்கல் அடுத்த வேலகவுண்டம்பட்டி தட்டாரம்பாளையத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (22). இவர் அங்குள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். நேற்று இரவு பணி முடித்து வீட்டிற்கு சென்ற மணிகண்டன் அங்கு யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், மணிகண்டன் இறப்புக்கு வேலகவுண்டம்பட்டி காவல் துறையினர்தான் காரணம் என அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் புகார் எழுப்பினர்.

Read Entire Article