ARTICLE AD BOX

நாமக்கல்: நாமக்கல்லில் மனைவி மற்றும் இரு குழந்தைகள் மர்மமான முறையில் இறந்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த தனியார் வங்கி ஊழியர் கரூர் மாவட்டம் அமராவதி பாலம் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் பதிநகரைச் சேர்ந்தவர் பிரேம்ராஜ் (38). இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு மோகனப்பிரியா (33) என்ற மனைவி, பிரினிதிராஜ் (6) என்ற மகள், ஒன்றரை வயதில் பிரினீஷ்ராஜ் என்ற மகனும் இருந்தனர். நேற்று பிரேம்ராஜ் வீட்டில் அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகளும் மர்மமமான முறையில் உயிரிழந்து கிடந்தனர். சம்பவம் தொடர்பாக நாமக்கல் போலீஸார் விசாரணை நடத்தினர்.

9 months ago
9







English (US) ·