நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் மர்மமான முறையில் உயிரிழப்பு

8 months ago 8
ARTICLE AD BOX

மஞ்சூர்: நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மஞ்சூர் அருகேயுள்ள மேல் கொட்டரகண்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (60). ராணுவத்தில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இவரது மனைவி பிரிந்து சென்று விட்டதால், தனியாக வசித்து வந்தார். மேலும், நீலகிரி மாவட்ட காங்கிரஸ் செயலாளராகவும் இருந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே கொட்டரகண்டியில் உள்ள வாடகை வீட்டில் ராஜ்குமார் தனியாக வசித்து வந்தார்.

Read Entire Article