பண்ணை வீடுகளுக்கு குறி - கோவையில் இளைஞர்களை இரவு ரோந்துப் பணியில் களமிறக்க முடிவு

7 months ago 8
ARTICLE AD BOX

கோவை: குற்றச் சம்பவங்களைத் தடுக்க, கிராமங்களில் இரவு ரோந்துப் பணியில் இளைஞர்களை கள மிறக்க மாவட்ட காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட் டங்களில், பண்ணை வீடுகளில் வசிக்கும் வயதானவர்களை குறிவைத்து நள்ளிரவு நேரங்களில் நுழையும் மர்மநபர்கள், அவர்களை கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவங்கள் சமீபத்தில் நடந்தன. கோவை மாவட்டத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

போலீஸாரின் கணக்கின்படி, கோவை மாவட்டத்தில் 3 ஆயிரம் எண்ணிக்கையில் பண்ணை வீடுகள் உள்ளன. சுல்தான்பேட்டை, கோமங்கலம், நெகமம், வடக்கிபாளையம் உள்ளிட்ட இடங்களில் பண்ணை வீடுகள் அதிகம் உள்ளன. இருப்பினும், தற்போது பண்ணை வீடுகள், தனி வீடுகள் குறித்து காவல் துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர். அத்துடன் பொது மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்துகின்றனர். இதன் தொடர்ச்சியாக, குற்றச் சம்பவங்களைத் தடுக்க மாவட்டப் பகுதிகளில், தன்னார் வலர்களையும் களத்தில் இறக்க காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

Read Entire Article