‘பந்துவீச்சாளர்களை குறை சொல்ல விரும்பவில்லை’ - ஹர்திக் பாண்​டியா

8 months ago 8
ARTICLE AD BOX

மும்பை: ஐபிஎல் டி 20 கிரிக்​கெட் தொடரில் மும்பை வான்​கடே மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற ஆட்​டத்​தில் 5 முறை சாம்​பிய​னான மும்பை இந்​தி​யன்ஸ் அணியை 12 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யது ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி). மும்பை வான்​கடே மைதானத்​தில் 2015-ம் ஆண்​டுக்கு பிறகு தற்​போது​தான் மும்பை இந்​தி​யன்ஸ் அணியை ஆர்​சிபி வீழ்த்​தி​யுள்​ளது.
முதலில் பேட்​டிங் செய்த ஆர்​சிபி 221 ரன்​கள் குவித்​தது. விராட் 67, கேப்​டன் ரஜத் பட்​டி​தார் 64, ஜிதேஷ் சர்மா 40, தேவ்​தத் படிக்​கல் 37 ரன்​கள் விளாசினர்.

222 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த மும்பை இந்​தி​யன்ஸ் அணி போராடிய நிலை​யில் 20 ஓவர்​களில் 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 209 ரன்​கள் எடுத்து தோல்வி அடைந்​தது. அதி​கபட்​ச​மாக திலக் வர்மா 29 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 56 ரன்​களும், கேப்​டன் ஹர்​திக் பாண்​டியா 15 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 42 ரன்​களும் விளாசினர்.

Read Entire Article