ARTICLE AD BOX

மும்பை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி). மும்பை வான்கடே மைதானத்தில் 2015-ம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் மும்பை இந்தியன்ஸ் அணியை ஆர்சிபி வீழ்த்தியுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 221 ரன்கள் குவித்தது. விராட் 67, கேப்டன் ரஜத் பட்டிதார் 64, ஜிதேஷ் சர்மா 40, தேவ்தத் படிக்கல் 37 ரன்கள் விளாசினர்.
222 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி போராடிய நிலையில் 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 29 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 56 ரன்களும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 15 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 42 ரன்களும் விளாசினர்.

8 months ago
8







English (US) ·