பயோபிக் சர்ச்சை: ராஜமவுலிக்கு ‘நோ’ சொல்லும் பால்கே குடும்பம்!

7 months ago 8
ARTICLE AD BOX

பயோபிக் பட விவகாரத்தில், ராஜ்குமார் ஹிரானி இயக்கவுள்ள படத்துக்கு மட்டுமே ஆதரவு என்று தாதா சாகேப் பால்கேவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்திய சினிமாவின் தந்தை என்றழைக்கப்படுபவர், தாதா சாகேப் பால்கே. இந்தியாவின் முதல் திரைப்படமாகக் கருதப்படும் ‘ராஜா ஹரிச்சந்திரா’வை 1913-ம் ஆண்டு இயக்கியவர். இவர் வாழ்க்கைக் கதையைத் தழுவி, ‘மேட் இன் இண்டியா’ என்ற தலைப்பில் படம் உருவாக இருப்பதாக இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி, கடந்த 2023-ம் ஆண்டு அறிவித்திருந்தார். வருண் குப்தாவும் எஸ்.எஸ். கார்த்திகேயாவும் இதன் ஸ்கிரிப்ட் வேலைகளில் சில வருடங்களாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் தாதா சாகேப் பால்கேவாக ஜூனியர் என்டிஆர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

Read Entire Article