ARTICLE AD BOX

நாமக்கல்: பரமத்தி அருகே மூதாட்டி கொலை வழக்கில், அவரது தோட்டத்தில் பணிபுரிந்த முன்னாள் பணியாளர் உட்பட 2 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். மேலும், கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே கொளத்துப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமியாத்தாள் (67). இவரது கணவர் ராசப்பன் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். மகன், மகளுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால், தனது தோட்டது வீட்டில் சாமியாத்தாள் மட்டும் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 7-ம் தேதி நள்ளிரவு சாமியாத்தாளின் வீட்டின் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பி தலைமறைவாகினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாமியாத்தாள் 8-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

6 months ago
7







English (US) ·