பல்லடம் கொலை வழக்கில் தொடர்பு: ஈரோட்டில் பிடிபட்ட குற்றவாளிகளிடம் தீவிர விசாரணை

7 months ago 8
ARTICLE AD BOX

திருப்பூர்: ஈரோடு மாவட்டத்தில் கொலை குற்றம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களுக்கு திருப்பூர் பல்லடம் தாய், தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்பிருப்பது தெரியவந்த நிலையில், கொலையானவரின் ஐபோன் குறித்து பிடிபட்டவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சேமலைக்கவுண்டம்பாளையம் பகுதியில் தெய்வசிகாமணி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கடந்தாண்டு நவம்பர் 28-ம் தேதி அன்று புகுந்த கும்பல் தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமேலு அம்மாள், மகன் செந்தில்குமார் என மூன்று பேரை கொடூரமாக அடித்துக் கொலை செய்து வீட்டில் இருந்த 8 பவுன் நகைகளைக் கொள்ளை அடித்துச் சென்றது.

Read Entire Article