ARTICLE AD BOX

பம்மல்: பல்லாவரம் அடுத்த பம்மல், சங்கர் நகரில் முன் பகை காரணமாக தந்தையை கொலை செய்த குற்றவாளியை பழிக்குப் பழி வாங்குவதற்காக காரில் கடத்திச் சென்ற கும்பலை போலீஸார் மடக்கிப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குன்றத்தூர், திருமுடிவாக்கம் பிரதான சாலை பகுதியை சேர்ந்தவர் சூர்யா(எ)ஈசாக் (29). இவர், கடந்த 2021 -ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரை கொலை செய்த வழக்கில் முதல் குற்றவாளி என்று கூறப்படுகிறது. அது முதல் சூர்யா தலைமறைவாக இருந்து வந்தார். தங்களது தந்தையை கொலை செய்த சூர்யாவை பழிக்குப் பழி வாங்குவதற்காக அவரது மகன்கள் மாரிச்செல்வன் (30), பூபாலன் (29) மற்றும் வெங்கடேசன் (27) ஆகிய மூன்று பேரும் சமயம் பார்த்து காத்திருந்தனர்.

9 months ago
9







English (US) ·