‘பாராட்டும் வகையில் இருந்த போராட்ட குணம்’ - வெற்றியை தவறவிட்ட சிஎஸ்கே அணி

8 months ago 8
ARTICLE AD BOX

ஐபிஎல் தொடரில் நேற்​று​ முன்​தினம் முலான்​பூரில் பஞ்​சாப் கிங்ஸ் அணிக்கு எதி​ராக நடை​பெற்ற ஆட்​டத்​தில் 18 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் சிஎஸ்கே தோல்வி அடைந்​தது. நடப்பு சீசனில் சிஎஸ்​கே​வின் 4-வது தோல்​வி​யாக இது அமைந்​தது. 5 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள அந்த அணி ஒரு வெற்​றி, 4 தோல்வி​களு​டன் 2 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 9-வது இடத்​தில் உள்​ளது.

பஞ்​சாப் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் 220 ரன்​கள் இலக்கை துரத்​திய சிஎஸ்கே அணி 20 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 201 ரன்​கள் எடுத்து தோல்​வியை தழு​வியது. எனினும் கடைசி வரை வெற்​றிக்​காக சிஸ்கே போராடிய விதம் பாராட்​டும் வகை​யில் இருந்​தது. இந்த ஆட்​டத்​தில் சிஎஸ்கே வெற்​றியை தவற​விட்​டது என்றே கூறவேண்​டும். மோச​மான பீல்​டிங் மற்​றும் இலக்கை துரத்​திய போது இறு​திப்​பகு​தி​யில் தொடர்ச்சியாக 24 பந்​துகளில் ஒரு பவுண்​டரி கூட அடிக்​காததும் தோல்விக்கு வித்​திட்​டது என்றே கூறலாம்.

Read Entire Article