ARTICLE AD BOX

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் முலான்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 18 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோல்வி அடைந்தது. நடப்பு சீசனில் சிஎஸ்கேவின் 4-வது தோல்வியாக இது அமைந்தது. 5 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி ஒரு வெற்றி, 4 தோல்விகளுடன் 2 புள்ளிகள் பெற்று பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 220 ரன்கள் இலக்கை துரத்திய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. எனினும் கடைசி வரை வெற்றிக்காக சிஸ்கே போராடிய விதம் பாராட்டும் வகையில் இருந்தது. இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே வெற்றியை தவறவிட்டது என்றே கூறவேண்டும். மோசமான பீல்டிங் மற்றும் இலக்கை துரத்திய போது இறுதிப்பகுதியில் தொடர்ச்சியாக 24 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்காததும் தோல்விக்கு வித்திட்டது என்றே கூறலாம்.

8 months ago
8







English (US) ·