ARTICLE AD BOX

சென்னை: பாலியல் வழக்கில் போலீஸாரால் தேடப்படும் கோவை கிறிஸ்துவ மதபோதகர் ஜான் ஜெபராஜ் தனக்கு முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கிறிஸ்தவ மத பாடல்கள் மூலமாக சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமாக இருப்பவர் கோவையைச் சேர்ந்த கிங் ஜெனரேஷன் கிறிஸ்துவ பிரார்த்தனைக் கூடத்தின் மதபோதகர் ஜான் ஜெபராஜ். கடந்த 2024-ம் ஆண்டு மே 21ம் தேதி அன்று ஜான் ஜெபராஜ் கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் விருந்து நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார். அப்போது அந்த நிகழ்வில் பங்கேற்ற 2 சிறுமிகளுக்கு அவர் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

8 months ago
8







English (US) ·