‘பிட்காயின்’ விவகாரத்தில் 6 பேரை கடத்திய கும்பல்: 2 பேர் கைது

3 months ago 5
ARTICLE AD BOX

சென்னை: சென்னை ஆயிரம் விளக்​கில், ‘பிட்​கா​யின்’ மாற்​றும் விவ​காரத்​தில் 6 பேரை காரில் கடத்தி சென்ற கும்​பலால் பரபரப்பு ஏற்​பட்​டது. அதில், 2 பேரை போலீ​ஸார் கைது செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். சென்​னை, பழைய வண்​ணாரப்​பேட்​டை, சுப்​பு​ராயன் தெரு​வில் வசித்து வருபவர் தேசிக மூர்த்​தி(50). இவர் ஆயிரம் விளக்கு பகு​தி​யில் ரியல் எஸ்​டேட் மற்​றும் புரோக்​கிங் அலு​வல​கம் நடத்தி வரு​கிறார். இந்​நிலை​யில், கடந்த 18-ம் தேதி காலை அலு​வல​கத்​துக்கு புறப்​பட்டு சென்ற தேசிக மூர்த்தி இரவு வீடு திரும்​ப​வில்​லை.

மறு​நாள், காலை தேசிக மூர்த்​தி​யின் மகன் பரத்​(20) செல்​போனுக்கு அழைப்பு ஒன்று வந்​தது. அதில், பேசிய நபர்​கள், ரூ.5 லட்​சம் பணத்தை கொடுத்​தால் தான் தேசிக மூர்த்​தியை உயிரோடு அனுப்​புவோம் என கூறி போனை துண்​டித்​துள்​ளனர். இதைக்​கேட்டு அதிர்ச்சி அடைந்த பரத், தண்​டை​யார்​பேட்டை காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

Read Entire Article