ARTICLE AD BOX

சென்னை: திருவல்லிக்கேணியில் உள்ள பிரபல ஓட்டலில் பிரியாணி, சவர்மா சாப்பிட்ட 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதைத் தொடர்ந்து அந்த ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பூட்டு போட்டு சீல் வைத்தனர்.
சென்னை திருவல்லிக்கேணி ஹைரோட்டில் இயங்கி வரும் பிரபல ஓட்டலில் கடந்த 30-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிரியாணி, சவர்மா உள்ளிட்ட உணவுகளை உட்கொண்ட திருவல்லிக்கேணி, பழைய வண்ணாரப்பேட்டை, சைதாப்பேட்டை பகுதிகளை சேர்ந்த 20 பேருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர்கள் திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் மருத்துவமனை, தண்டையார்பேட்டை தொற்று நோய் தடுப்பு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து உணவு பாதுகாப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

8 months ago
8







English (US) ·