ARTICLE AD BOX

சென்னை: புதுச்சேரி அரசு ஒப்பந்ததாரர் கொலையில் தமிழக போக்குவரத்து ஊழியர், மனைவி உறவினருடன் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியுடன் தகாத உறவில் இருந்ததால் தீர்த்து கட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
புதுச்சேரி முதலியார்பேட்டை, பாப்பன்சாவடியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (31). இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இவர் புதுச்சேரி பொதுப்பணித் துறையில் கழிவுநீர் அகற்றும் ஒப்பந்தம் பெற்று சொந்தமாக கழிவுநீர் அகற்றும் வாகனம் வைத்து தொழில் செய்து வந்தார். இந்நிலையில், கழிவுநீர் அகற்று வாகனத்துக்கு தேவையான உதிரி பாகங்கள் வாங்குவதற்காக நேற்று, அவரது பெண் உதவியாளருடன் சென்னை வந்துள்ளார்.

2 months ago
3







English (US) ·