ARTICLE AD BOX

புதுச்சேரி: லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் பிறந்தநாள் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த புதுச்சேரி மாநில பாஜக இளைஞரணி துணைத் தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
புதுச்சேரி அடுத்த கருவடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் உமா சங்கர் (வயசு 40). இவர் புதுச்சேரி மாநில பாஜகவின் இளைஞரணி துணைத் தலைவராக உள்ளார். கருவடிக்குப்பம் சித்தானந்த கோயில் அருகே பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மாட்டினுக்கு இன்று பிறந்தநாள் விழாவை ஒட்டி ஏற்படுகள் செய்து வந்தார். இந்த நிலையில் நள்ளிரவு கருவடிகுப்பம் பகுதியில் ஏற்பாடுகளை பார்வையிட சென்று கொண்டிருந்த உமாசங்கரை 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த உமாசங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

8 months ago
8







English (US) ·