புனே பேருந்து நிலையத்தில் வன்கொடுமை: குற்றவாளிக்கு 12 நாள் போலீஸ் காவல்

9 months ago 8
ARTICLE AD BOX

மும்பை: மகாராஷ்டிராவின் புனே பேருந்து நிலையத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தத்தாத்ரே ராம்தாஸ் கடே என்ற 37 வயது நபரை புனே போலீஸார் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரின் ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் 26 வயது பெண் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலையில் சதாரா செல்லும் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது இளம்பெண்ணை அணுகிய மர்ம நபர் ஒருவர், மற்றொரு பிளாட்பாரத்தில் பேருந்து நிற்பதாக கூறி தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத பிளாட்பாரத்தில் நின்றிருந்த பேருந்தில் இளம்பெண் ஏறி அமர்ந்ததும் அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு மர்ம நபர் தப்பியோடிவிட்டார்.

Read Entire Article