ARTICLE AD BOX

வரும் 19-ம் தேதி தொடங்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஐஸ்பிரீத் பும்ரா பங்கேற்கமாட்டார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது. இது, இந்த தொடரில் இந்திய அணியை இம்சிக்கும் விஷயமாக அமைந்துள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி கலந்து கொள்ளும் ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெற உள்ளது. இதில் தொடரை நடத்தும் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து என எட்டு அணிகள் விளையாடுகின்றன. மார்ச் 9-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

10 months ago
9







English (US) ·