பெண் பயணிகள் பாதுகாப்பு விவகாரம்: ரயில்வே டிஜிபியுடன் டிஜிபி சங்கர் ஜிவால் ஆலோசனை

10 months ago 9
ARTICLE AD BOX

சென்னை: பெண் பயணிகள் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக ரயில்வே டிஜிபியுடன், சட்டம் - ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் இன்று (பிப்.19) ஆலோசனை மேற்கொண்டார். இதில், ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் மருத்துவ பரிசோதனைக்காக தனது தாயார் வீடான சித்தூர் மாவட்டத்துக்கு செல்வதற்காக கோவையில் இருந்து காட்பாடி வழியாக திருப்பதி வரை செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயிலில் பொது வகுப்பு பெட்டியில் அண்மையில் பயணித்தார். ரயில் வேலூர் மாவட்டம், காவனூர் - விரிஞ்சிபுரம் இடையே சென்று கொண்டிருந்தபோது, பெண்கள் பெட்டியில் தனியாக பயணித்த கர்பிணியிடம் அதே பெட்டியில் இருந்த இளைஞர் ஒருவர் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றார். பெண் மறுத்ததால், அவரை ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டார். இதில், நல்வாய்ப்பாக கர்ப்பிணி உயிர் தப்பினார்.

Read Entire Article