பெண் பைக் டாக்ஸி ஓட்டுநரிடம் பாலியல் அத்துமீறல்: சென்னையில் இளைஞர் கைது

3 months ago 5
ARTICLE AD BOX

சென்னை: ஓட்​டேரி பகுதியைச் சேர்ந்த 31 வயது பெண் ஒரு​வர் பைக் டாக்​ஸி ஓட்டி வரு​கிறார். நேற்று முன்​தினம் மதி​யம், கோயம்​பேடு முதல் அரும்​பாக்​கம், எம்​.எம்​.டி.ஏ. வரை செல்ல ஓர் அழைப்பு வந்​தது. அந்த வாடிக்​கை​யாளரை செல்​போனில் தொடர்பு கொண்​ட ​போது எதிர்​முனை​யில் பேசிய இளைஞர் தனது தாயாரை அழைத்​துச் செல்லபுக் செய்​த​தாக தெரி​வித்​தார்.

இதையடுத்து அந்த பெண் அங்கு சென்​ற​போது, அங்கு நின்​றிருந்த இளைஞர், ‘நான்​தான் சவாரிக்​காக அழைத்​தேன். கல்​லூரிக்கு நேர​மாவ​தால் என்னை கல்​லூரி​யில் இறக்​கி​விடுங்​கள்’ என்று கேட்​டுக் கொண்​டார். முதலில் தயங்​கிய அந்த பெண், பின்​னர் அழைத்​துச் செல்ல சம்​ம​தித்து அந்த இளைஞரை இருசக்கர வாக​னத்​தில் ஏற்​றிச் சென்​றார்.

Read Entire Article