ARTICLE AD BOX

சென்னை: ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர் பைக் டாக்ஸி ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் மதியம், கோயம்பேடு முதல் அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. வரை செல்ல ஓர் அழைப்பு வந்தது. அந்த வாடிக்கையாளரை செல்போனில் தொடர்பு கொண்ட போது எதிர்முனையில் பேசிய இளைஞர் தனது தாயாரை அழைத்துச் செல்லபுக் செய்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து அந்த பெண் அங்கு சென்றபோது, அங்கு நின்றிருந்த இளைஞர், ‘நான்தான் சவாரிக்காக அழைத்தேன். கல்லூரிக்கு நேரமாவதால் என்னை கல்லூரியில் இறக்கிவிடுங்கள்’ என்று கேட்டுக் கொண்டார். முதலில் தயங்கிய அந்த பெண், பின்னர் அழைத்துச் செல்ல சம்மதித்து அந்த இளைஞரை இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்றார்.

3 months ago
5







English (US) ·