ARTICLE AD BOX

கோவை: பெருமாளை இழிவுபடுத்தியதாக நடிகர் சந்தானம் மீது, கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி மாவட்ட தலைவர் கே.தசரதன், செய்தித் தொடர்பாளர் சி.தனபால் உள்ளிட்டோர், கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
அதில், “இன்று காலை நாங்கள் இணையதளத்தை பார்த்துக் கொண்டு இருந்தோம். அப்போது யூடியூப்பில் உள்ள ஒரு லிங்க்கில் திரைப்பட நடிகர் சந்தானம் நடித்த ஒரு படத்தின் பாடல் ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்தது. அந்தப் பாடலில், இந்து மக்கள் வணங்கும் வெங்கடேச பெருமாளின் பாடல் கேலி, கிண்டல் செய்து பாடப்பட்டு இருந்தது. இது இந்து மதத்தின் மீதும், இந்து தெய்வத்தின் மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்ட எங்களுடைய மனதை புண்படும்படியாகவும், இந்து மக்கள் வணங்கும் பெருமாளை இழிவுபடுத்தும் வகையிலும் இருந்தது.

7 months ago
8





English (US) ·