ARTICLE AD BOX

சென்னை: சிறுவன் ஓட்டி வந்த கார் தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில் 5 பேர் காயம் அடைந்தனர். சென்னை பேசின் பாலத்தில் நேற்று காலை சென்ற கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக தலைக்குப்புற கவிழ்ந்தது. காரில் 5 பேர் இருந்தனர். அவர்கள் உயிர் பயத்தில் அபயக்குரல் எழுப்பினர். இதைக் கேட்டு அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக காரில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வியாசர்பாடி போலீஸார் சம்பவ இடம் விரைந்து சென்று கார் கண்ணாடியை உடைத்து, காருக்குள் சிக்கியிருந்த 5 பேரையும் பத்திரமாக மீட்டனர். யாருக்கும் பெரிய அளவில் காயங்கள் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

8 months ago
9







English (US) ·