ARTICLE AD BOX

ஓடும் பேருந்தில் தங்க நகைத் திருடியதாக பெண் ஊராட்சி மன்றத் தலைவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை கோயம்பேடு நெற்குன்றம் ரெட்டித் தெருவைச் சேர்ந்தவர் வரலட்சுமி (50). இவர், கடந்த ஜூலை மாதம் 14-ஆம் தேதி காஞ்சிபுரத்துக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து அரசு பேருந்து மூலம் கோயம்பேடு நோக்கி வந்து கொண்டிருந்தார். கோயம்பேடு வெங்காய மண்டி பேருந்து நிலையத்தில் வரலட்சுமி இறங்கினார். பேருந்தை விட்டு இறங்கிய பின்னர், தான் வைத்திருந்த பையை திறந்து பார்த்தார். அப்போது அதில் இருந்த 5 பவுன் தங்க நகைத் திருடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

3 months ago
5







English (US) ·