ARTICLE AD BOX

கும்பகோணம்: ஆடுதுறை பேரூராட்சித் தலைவர் கொலை முயற்சி வழக்கில் போலீஸாரால் தேடப்பட்ட இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கும்பகோணம் அடுத்த ஆடுதுறை பேரூராட்சித் தலைவராக (பாமக) இருப்பவர் ம.க.ஸ்டாலின். இவரை கடந்த 5-ம் தேதி ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்றது. இது தொடர்பாக தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், உடையாளூர் புதுத்தெருவைச் சேர்ந்த லட்சுமணன்(30) என்பவர், கொலை முயற்சியில் ஈடுபட்ட கும்பலுக்கு நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்துக் கொடுத்ததாக தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், லட்சுமணனிடம் விசாரணை நடத்துவதற்காக 2 நாட்களுக்கு முன் உடையாளூருக்கு போலீஸார் சென்றபோது, அங்கு லட்சுமணன் இல்லை.

3 months ago
5







English (US) ·