பேரூராட்சி தலைவர் கொலை முயற்சி வழக்கில் போலீஸாரால் தேடப்பட்ட இளைஞர் தற்கொலை

3 months ago 5
ARTICLE AD BOX

கும்பகோணம்: ஆடு​துறை பேரூ​ராட்​சித் தலை​வர் கொலை முயற்சி வழக்​கில் போலீ​ஸா​ரால் தேடப்​பட்ட இளைஞர் தூக்​கிட்​டுத் தற்கொலை செய்து கொண்​டார். கும்​பகோணம் அடு​த்த ஆடு​துறை பேரூ​ராட்​சித் தலை​வ​ராக (பாமக) இருப்​பவர் ம.க.ஸ்​டா​லின். இவரை கடந்த 5-ம் தேதி ஒரு கும்​பல் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்​றது. இது தொடர்​பாக தனிப்​படை போலீ​ஸார் தீவிர விசா​ரணை மேற்​கொண்டு வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், உடை​யாளூர் புதுத்​தெரு​வைச் சேர்ந்த லட்​சுமணன்​(30) என்​பவர், கொலை முயற்​சி​யில் ஈடு​பட்ட கும்​பலுக்கு நாட்டு வெடிகுண்​டு​களை தயாரித்​துக் கொடுத்​த​தாக தகவல் கிடைத்​துள்​ளது. அதன்​பேரில், லட்​சுமணனிடம் விசா​ரணை நடத்​து​வதற்​காக 2 நாட்​களுக்கு முன் உடை​யாளூருக்கு போலீ​ஸார் சென்​ற​போது, அங்கு லட்​சுமணன் இல்​லை.

Read Entire Article