ARTICLE AD BOX

பொள்ளாச்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த காப்பக நிர்வாகிகள் 5 பேரை தனிப்படை போலீஸார் திருவனந்தபுரத்தில் வைத்து கைது செய்தனர்.
கோவை மாவட்டம் சோமனூர் கரவளி மாதப்பூரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகன் வருண் காந்த் (22) என்பவரை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, பொள்ளாச்சி மகாலிங்கபுரம் முல்லை நகரில், யுத்ரா சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற பெயரில் நடத்தப்படும் காப்பகத்தில் சேர்த்தார். கடந்த 15ம் தேதி காப்பகத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்தவர்களை ஆழியாருக்கு சுற்றுலா அழைத்துச் சென்ற போது, அங்கு வருண் காந்த் காணாமல் போனதாக அவரது தந்தைக்கு காப்பக நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

7 months ago
8







English (US) ·