ARTICLE AD BOX

போடி: திருவிழாவுக்கு போடி வந்த மதுரை மாவட்டம் ஆப்பக்கரை கிராம நிர்வாக அலுவலர் ஆற்றில் நண்பர்களுடன் குளித்த போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இவரது உடல் இன்று (அக்.10) மீட்கப்பட்டது.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள அப்பிபட்டி கிராம வருவாய் ஆய்வாளராக பணியாற்றுபவர் பால முருகன். இவர் தேனி மாவட்டம் போடி மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர். இவர் தனது கிராமக் கோயிலான செல்லாயி அம்மன் புரட்டாசி மாத திருவிழாவை முன்னிட்டு தனது ஊருக்கு பேரையூர் ஆப்பக்கரை கிராம நிர்வாக அலுவலர் மதுரை வீரன் மற்றும் பேரையூர் பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் சக்திவேல், சக்கரை, முத்துக் காளை ஆகியோரை அழைத்து வந்துள்ளார்.

2 months ago
4







English (US) ·