ARTICLE AD BOX

சென்னை: ஆன்லைன் வர்த்தக தளத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்ட குஜராத் இளைஞர் கைது செய்யயப்பட்டுளார். இவர் தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் இதேபோல் கைவரிசை காட்டியுள்ளது அம்பலமாகி உள்ளது.
ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் ஸ்வேதரன்யன் (76). இவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த ஜூனில் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில், ‘ஆன்லைன் வர்த்தக (டிரேடிங்) தளத்தில் முதலீடு செய்தபோது, போலியான ஆன்லைன் டிரேடிங் தளம் மூலம் ரூ.22.30 கோடியை இழந்து விட்டேன். எனவே, எனது பணத்தை மீட்டு, மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும்’ என புகாரில் தெரிவித்து இருந்தார்.

3 months ago
5







English (US) ·