மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து: ‘சி’ பிரிவில் இடம் பெற்றது இந்திய அணி

5 months ago 6
ARTICLE AD BOX

புதுடெல்லி: ஆசிய கால்​பந்து கூட்​டமைப்பு சார்​பில் மகளிருக்​கான ஆசிய கோப்பை கால்​பந்து தொடர் வரும் 2026-ம் ஆண்டு மார்ச் 1 முதல் 21-ம் தேதி வரை ஆஸ்​திரேலி​யா​வில் நடை​பெறுகிறது. 12 அணி​கள் கலந்து கொள்​ளும் இந்​தத் தொடருக்​கான ‘டி​ரா’ நிகழ்வு நேற்று சிட்​னி​யில் நடை​பெற்​றது. தொடரில் பங்​கேற்​கும் 12 அணி​களும் 3 பிரிவு​களாக பிரிக்​கப்​பட்​டுள்​ளன.

இந்​திய மகளிர் அணி ‘சி’ பிரி​வில் இடம் பெற்​றுள்​ளது. இதே பிரி​வில் முன்​னாள் சாம்​பியன்​களான ஜப்​பான், சீன தைபே மற்​றும் வியட்​நாம் அணி​களும் இடம் பெற்​றுள்​ளன. இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் மார்ச் 4-ம் தேதி வியட்​நா​முடன் மோதுகிறது. இந்த ஆட்​டம் பெர்த் மைதானத்​தில் நடை​பெறுகிறது. தொடர்ந்து 7-ம் தேதி ஜப்​பானுட​னும், 10-ம் தேதி சீன தைபேவுட​னும் மோதுகிறது. இந்த இரு ஆட்​டங்​களும் சிட்​னி​யில் நடை​பெறுகின்​றன. ஒவ்​வொரு பிரி​விலும் முதல் இரு இடங்​களை பிடிக்​கும் அணி​களும் 3-வது இடத்தை பிடிக்​கும் சிறந்த அணி​களில் இரண்​டும் என மொத்​தம் 8 அணி​கள் கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறும்.

Read Entire Article