ARTICLE AD BOX

திருப்பத்தூர் அருகே சட்டவிரோதமாக பல அடி ஆழத்துக்கு தோண்டி மணல் கடத்திய வழக்கில் திமுக பேரூராட்சி கவுன்சிலர் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிந்த போலீஸார் 3 பேரை கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மாங்குடி பகுதியில் பாலாற்றையொட்டி தனியார் இடங்களில் சில அடி ஆழத்திலேயே மணல் கிடைக்கிறது. இதையடுத்து அவற்றை சிலர் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக அள்ளி லாரிகளில் கடத்தி வருகின்றனர். அப்பகுதி மக்களின் தொடர் புகாரையடுத்து, டிஎஸ்பி செல்வக்குமார் தலைமையிலான போலீஸார் இருதினங்களுக்கு முன் அப்பகுதியில் சோதனையிட்டனர்.

10 months ago
9







English (US) ·