ARTICLE AD BOX

கள்ளக்குறிச்சி: ‘மதுரை ஆதீனத்தை கொலை முயற்சி செய்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. மதுரை ஆதீனமே, தன்னை கொல்ல முயற்சி நடப்பதாக தெரிவித்து வருகிறார். முதற்கட்ட விசாரணையில் கொலை முயற்சிக்கான சதி எதுவும் நடந்ததாக தெரியவில்லை. இந்த விபத்தானது முழுக்க முழுக்க மதுரை ஆதீனம் பயணம் செய்த வாகனத்தின் ஓட்டுநரின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து’ என கள்ளக்குறிச்சி காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.
சென்னை சென்ற மதுரை ஆதீனத்தின் கார் உளுந்தூர்பேட்டை அருகே விபத்தில் சிக்கியது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் துறை அதன் உண்மைத் தன்மைக் குறித்து இன்று (மே 3) விளக்கம் அளித்துள்ளது. அதில், “கடந்த 2-ம் தேதி மதுரை ஆதீனம் மடாதிபதி, காரில் சென்னைக்கு பயணித்துக் கொண்டிருந்தபோது, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை- சேலம் சாலை ரவுண்டானா அருகே மற்றொரு காரின் மீது இடித்துக்கொண்ட சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திலிருந்து பொதுமக்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் போலீஸார், சம்பவ இடத்துக்குச் செல்வதற்குள் இரு தரப்பினர்களும் சென்றுவிட்டனர்.

7 months ago
8







English (US) ·